tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல பயிற்சி முகாம்

கடலூர், மே 5-தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மண்டல பயிற்சி வகுப்பு கடலூரில் மே 4, 5 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.பல்வேறு தலைப்புகளின் கீழ் நடைபெற்ற வகுப்பில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில நிர்வாகிகள் தே.லட்சுமணன், வழக்கறிஞர் பாரதி அண்ணா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் முனைவர் ஜானகிராஜா, மாவட்டச் செயலாளர் ஆர்.ஆளவந்தார், மாவட்டப் பொருளாளர் ராம.நடேசன்மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள்வி.இராதாகிருஷ்ணன், ஏ.கிருஷ்ணமூர்த்தி, வழக்குறைஞர் முருகன், எம்.ஆறுமுகம், கே.சாந்தி, எஸ்.மாயவன் உள்ளிட்ட ஏராளமானோர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.மாற்றுத் திறனாளிகளும் எதிர்கால இந்தியாவும், மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சட்டங்கள், நலத்திட்டங்கள், சங்கத்தின் எதிர்கால கடமைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்ச்சி முகாம் நடைபெற்றது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுவை, அரியலூர் மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.

;