tamilnadu

செய்யாறு மருத்துவமனையில் மருத்துவர், பணியாளர்களை நியமித்திடுக

திருவண்ணாமலை, அக். 28 – செய்யாறு அரசு மருத்துவ மனையில் மருத்துவர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என சிபிஎம் வட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யாறு வட்டார 9 ஆவது மாநாடு வெள்ளியன்று (அக்.25) செய்யாறில் நடைபெற்றது. எம்.தாமோதரன்  வரவேற்றார். ஆர்.சதீஷ்குமார்  அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.  மாரிமுத்து, சோலை பழநி ஆகியோர்  தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன்  தொடக்க  உரையாற்றினார். செயலாளர்  டி.வெங்கடேசன்  வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எம்.வீரபத்திரன்  நிறைவுரையாற்றினார்.   வட்டக்குழு தேர்வு 7 பேர் கொண்ட இடைக்குழுவின் செயலாளராக ஆர்.சதீஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் கீழ் புதுப்பாக்கம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்  உருவாக்க வேண்டும், நாவல் பாக்கம் மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், வெம்பாக்கம் வட்ட தலைநகருக்கு, பிரம்மதேசம், கனி கிலுப்பை, மாங்கால் கூட்டு சாலை பகுதிகளில் இருந்து நகர பேருந்து இயக்க வேண்டும், வெம்பாக்கத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.