tamilnadu

img

ஒரே நாளில் ரூ.15 கோடி கல்விக் கடன் வழங்கி சாதனை

மதுரை மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்கும் முகாம் டோக் பெருமாட்டி கல்லூரியில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியில் ஒரே நாளில் 115 மாணவர்களுக்கு ரூ.15 கோடி ரூபாய் அளவிற்கான கல்விக் கடன்கள் வழங்கப்பட்டன. மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், துணைமேயர் டி.நாகராஜன் மற்றும் வங்கி அதிகாரிகள் முகாமில் கலந்து கொண்டனர்.