tamilnadu

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை,ஏப்.5- மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தில்லியில் வெள்ளியன்று (ஏப்.5) வெளி யிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில், “அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழ் நாட்டின் உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.  

நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய, மாநிலக் கட்சியாக திமுகவால் நிறை வேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பி யோருக்கான தக்க பதிலாக அமைந்துள் ளது காங்கிரஸ் வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை. அதனால்தான் சொல்கிறோம். இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி” என்று பதிவிட்டுள்ளார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் ஜனநாயகம் பலவீனம் அடைந்து விட்டது. நாடு முழுவதும் சமூக,  பொருளாதார, சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும். ஒன்றிய அரசு  பணியிடங்களில் 30 லட்சம் காலிப் பணி யிடங்களை நிரப்புவோம்.

அரசு பொது த்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும். ஒன்றிய அரசு பணிகளில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணி யிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும். பாஜக ஆட்சியில் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 மாநில அரசுகளுடன் கலந்தா லோசித்து புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். மூத்த குடி மக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளி களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.1000 வழங்கப்படும். 2025 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். 2024 மார்ச் மாதம் வரையில் பெறப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். என்பது இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்றும் முதல்வர் தெரிவித்திருக்கிறார். (விபரம் : 4)