கடலூர் மாவட்டத்தில் எழுச்சியோடு கிளர்ச்சி பிரச்சாரம்
கடலூர், ஜூன் 19- கடலூர் மாவட்டத்தில், ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரியும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் எழுச்சியோடு மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சாரத்தில் மாநில, மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். திட்டக்குடி திட்டக்குடி பகுதியில் நடைபெற்ற பிரச்சார இயக்கங்களுக்கு வட்டச் செயலாளர் வீ.அன்பழகன் தலைமை தாங்கினார். வட்டக் குழு உறுப்பினர்கள். வரதன், ஹரிபாபு, ஜி.முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ், மாவட்ட குழு உறுப்பினர் பி.முத்து லட்சுமி, மூத்த தோழர் ஆர்.ராஜேந்திரன், வட்டக் குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், மாணிக்கவேல், சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருத்துறையூர் சின்ன பேட்டையில் தொடங்கி பல்வேறு கிராமங்கள் வழியாக திருத்துறையூரில் நிறை வடைந்தது. வட்டக் குழு உறுப்பினர் ஆர்.லோக நாதன் தலைமை தாங்கி னார். மாநில செயற் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன், வட்ட செயலாளர் எஸ்.கே, ஏழு மலை, மாவட்ட குழு உறுப்பினர் எஸ். வினோத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடலூர் நகரம் மக்கள் சந்திப்பு நடை பயண பிரச்சார இயக்கம் புரிகீஸ்பேட்டையில் துவங்கி வண்டிப்பாளைய த்தில் நிறைவடைந்தது. வீடு வீடாக கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிர சுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தனர். கட்சி யின் மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.வாலண்டினா, மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாநகர உறுப்பி னர்கள் தேவநாதன், சாஹிரா, மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் சௌமியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினர். குறிஞ்சிப்பாடி குறிஞ்சிப்பாடி ஒன்றி யத்தில் செயலாளர் எம்.பி. தண்டபாணி தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சி பிரச்சாரத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கே.சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, வி.மணிவண்ணன், எஸ்.கதிர்வேல், எஸ்.கார்த்தி கேயன், எஸ்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாலூர் நெல்லிக்குப்பம் பகுதி குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார நடை பயணம் சித்தரசூரில் தொடங்கி பாலூர் கடைத்தெரு வரை நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், பகுதி குழு செயலாளர் ஸ்டீபன் ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ஜெய பாண்டியன், பகுதி குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடேசன், சுந்தர பாண்டியன், அருண்மொழி, சின்னப்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நல்லூர் வேப்பூர் வட்டக்குழு சார்பில் நல்லூரில் நடைபெற்றது. கிளை செயலாளர் கே.சந்திரன் தலைமை தாங்கினார். எஸ்.பரமசிவம், என்.கந்தசாமி, சங்கர், பூமாலை, கே.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், வட்டக் குழு உறுப்பினர் ஜி.ராமதாஸ், சாமிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடுவீரப்பட்டு கடலூர் ஒன்றியக் குழு சார்பில் நடுவீரப்பட்டு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், ஒன்றியச் செயலாளர் பஞ்சாட்சரம், மூத்த தோழர் எஸ்.தட்சிணாமூர்த்தி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பண்ருட்டி பண்ருட்டி வட்ட குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் பி.ஆண்டி குப்பத்தில் துவங்கி காடாம்புலியூரில் முடிவடைந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன், வட்டச் செயலாளர் எஸ்.கே. ஏழு மலை, மாவட்டக்குழு உறுப் பினர்கள் டி.கிருஷ்ணன், எஸ்.வினோத்குமார், வட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.லோகநாதன், குமர குருபரன், ஜெகதீசன், பன்னீர், காசி உள்ளிட்ட பேசினர். ராயர்பாளையம் பண்ருட்டி ஒன்றியம் ராயர் பாளையத்தில் துவங்கியது. ஏரி பாளையம், காமாட்சி பேட்டை, திரு வாமூர், சேமகோட்டை, சின்ன சேமக்கோட்டை, உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராமங்களில் மக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். பிரச்சாரத்திற்கு வட்டக் குழு உறுப்பினர் ஏ.பன்னீர் தலைமை தாங்கி னார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் துவக்கி வைத்தார். பிரச்சார இயக்கத்தில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன், வட்ட செயலாளர் எஸ்.கே, ஏழுமலை, மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.கிருஷ் ணன், எஸ்.வினோத்குமார், வட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.லோகநாதன், வி.பூர்வசந்திரன், எம்.முருகன், கே.வடமலை,, ஜி.பி.தேவநாதன், காசி.லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அண்ணாலை நகர் சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடந்த கிளர்ச்சி பிரசார இயக்கத்திற்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மல்லிகா தலைமை தாங்கி னார். நகர செயலாளர் ராஜா துவக்கி வைத்து பேசினார். இதில் நகர்குழு உறுப்பினர் சங்கமேஸ்வரன், சதீஷ், பூபதி கிளைச் செயலாளர் ராமச்சந்திரன், விஜி மற்றும் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மெயின் ரோடு, காளியம்மன் கோவில் தெரு, திருவக் குளம் வழியாக சென்று பொதுமக்கள் மற்றும் வணிகர்களை சந்தித்து ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கை கள் குறித்து துண்டு பிரசுரத்தை வழங்கினர்.