விழுப்புரம், ஜூன் 4- விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் காலை முதலே முன்னிலையில் இருந்த விசிக வேட்பாளர் துரை ரவிக்குமார் வெற்றி பெற்றார். 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதி யாகும். இந்த தொகுதி பட்டியல் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதியாகும். விழுப்புரம் மக்களவைத் தொகுதி திண்டி வனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளன.
விழுப்புரம் மக்களவைத் தொகுதி இதுவரை 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் 2009- ல் நடைபெற்ற மக்களவைத் தொகுதியில் அதிமுக எம். ஆனந்தன் 306826 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட விசிக வேட்பாளர் பெற்ற 304029 வாக்கை விட 2797 வாக்கு பெற்று வெற்றி பெற்றார்.2014-ல் அதிமுக எஸ்.ராஜேந்திரன் 482704 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக டாக்டர் கே.முத்தையன் பெற்ற 289337 வாக்குகளை விட 193367 வாக்குகள் பெற்று 2- முறையாக அதிமுக வெற்றி பெற்றது.2019- ல் விசிக வேட்பாளர் து.ரவிக்குமார் 5,59,585 வாக்குகளை பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் பெற்ற 4,31,517 வாக்கை விட 1,28,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் பாக்கியராஜ், பாமக சார்பில் முரளி சங்கர் உட்பட 17- வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலை யில் விசிக, அதிமுக, பாமக இடையே மும்முனைப் போட்டி நடைபெற்றது. இதில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் செவ்வாய்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் காலை எண்ணிக்கை தொடங்கிய முதலே இந்தியா கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை.ரவிக்குமார் முதல் சுற்றில் 22 ஆயிரத்து 950 வாக்குகளும், இரண்டாவது சுற்றில் 45,880 வாக்குகளும், மூன்றாவது சுற்றில் 68,239 வாக்கு களும், நான்காவது சுற்றில் 89 ஆயிரத்து 715 வாக்குகளும், ஐந்தாவது சுற்றில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 480 வாக்குகளும், ஆறாவது சுற்றில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 115 வாக்கு களும், ஏழாவது சுற்றில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து,406 வாக்குகளும், எட்டாவது சுற்றில் ஒரு லட்சத்து 85 ஆயி ரத்து, 705 வாக்குகளும், ஒன்பதாவது சுற்றில் 2 லட்சத்து,9ஆயிரத்து,735 வாக்கு களும், பத்தாவது சுற்றில் 2 லட்சத்து,33ஆயிரத்து,419 வாக்குகளும், 11-வது சுற்றில் 2 லட்சத்து,56ஆயிரத்து,857 வாக்குகளும், 12-வது சுற்றில் 2 லட்சத்து,78ஆயிரத்து,230 வாக்குகளும், 13 வது சுற்றில் மூன்று லட்சத்தி 1ஆயி ரத்து,599 வாக்குகளும், 14வது சுற்றில் 3 லட்சத்து,21ஆயிரத்து,716 வாக்குகளும் 15-வது சுற்றில் 3 லட்சத்து,42ஆயிரத்து,311 வாக்குகளும் 16வது சுற்றில் மூன்று லட்சத்து 89 ஆயிரத்து, 150 வாக்குகளும், 17-வது சுற்றில் நாலு லட்சத்து 12 ஆயிரத்து 168 வாக்குகளும்,18- வது சுற்றில் 4- லட்சத்து,34- ஆயிரத்து,111 வாக்குகளும், 18- வது சுற்றில் 4- லட்சத்து,34- ஆயிரத்து 111 வாக்குகளும்,19- வது சுற்றில் 4- லட்சத்து,52- ஆயிரத்து,178 வாக்குகளும், விசிக 4- லட்சத்து,77- ஆயிரத்து 033 பெற்று 4- லட்சத்து,5- ஆயிரத்து,330 வாக்கு கள் பெற்ற அதிமுக வேட்பாளரை விட 72ஆயிரத்து,530- வாக்குகள் பெற்றார். முதல்முறையாக இந்த தொகுதியில் பானை சின்னம் வெற்றி பெற்றது. இதை யடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.