இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த அக்டோபர் 8ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரே நாள் இரவில் 5 விசைப்படகுகளையும் 47 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்தது.
தலைமன்னார் அருகே 30 மீனவர்களும், நெடுந்தீவு அருகே 17 மீனவர்களும் சிறைபிடிப்பு. ஒரேநாளில் 47 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருவதாக மீனவர்கள் குற்றச்சாட்டியதோடு இன்றுமுதல் வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் இன்று 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
