புதுப்பிக்கப்பட்ட சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடையில் அருவி போல் மழை நீர்
சிதம்பரம், மே 19- சிதம்பரம் ரயில் நிலை யம் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ளது. இந்த ரயில் நிலையத்தை ஒன்றிய அரசு அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ 6 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் புதுப்பித்து வரும் வியாழக்கிழமை திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் ரயில் நிலையத்தில் நடை மேடையில் உள்ள மேற்கூரை மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் போர்டி கோவில் சிதம்பரம் சுற்று வட்டார பகுதியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை இரவு நேரத்தில் பெய்த கோடை மழையை தாங்கிக் கொள்ள முடியாமல் அருவி போல் மேற்கூரையிலிருந்து மழைநீர் உள்ளே கொட்டியது. இதனால் ரயில் பயணிகள் நடை மேடையில் அமர முடியாத சூழல் ஏற்பட்டது மேலும் கொட்டிய மழை நீர் நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள மின் விசிறி மீது பட்டதால் மின் விபத்து ஏற்படுமோ அச்ச மும் பயணிகள் மத்தியில் ஏற்பட்டது. தரமற்ற பணிகள் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை சரி செய்யவில்லை என்றால் திறப்பு விழாவின் போது அப்பகுதியில் உள்ள ரயில் பாதுகாப்பு மற்றும் பய ணிகள் சங்கத்தினர் ஆர்ப்பா ட்டத்தில் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்