சென்னை,டிச.2- ‘மிக்ஜாம்’ புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகே எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலை கொண்டு இருக்கும் காற்ற ழுத்த தாழ்வு பகுதி காரண மாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசுகையில், “மிக்ஜாம் புயலை எதிர் கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. எந்தெந்தப் பகுதிகளில் மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க் கிறோமோ, அப்பகுதிக்கு மீட்புக் படைகளை அனுப்பி வைத்திருக்கிறோம்” என்றார்.
புயலால் சேதம் அடை யும் மரங்கள், மின்கம்பங்களை விரைந்து அகற்ற நடவடிக் கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கி றது. தேவையான இடங்க ளில் நிவாரண முகாம்கள் அமைக்கவும் அதிகாரி களுக்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 98 கால்நடைகள் பலியாகி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
பருவமழை பாதிப்பால் இதுவரை 420 குடிசை வீடுகள் பாதிப்படைந் துள்ளன. உயிர்பலி, குடி சைகள் சேதமடைந்தால் உடனடி நிவாரணம் வழங் கப்படும். பயிர்கள் சேத மடைந்தால் கணக் கெடுப்பு நடத்தி தான் நிவாரணம் வழங்கப்படும். மண்டல அலுவலர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் களத்துக்கு செல்ல முதலமைச்சர் உத்தரவிட் டுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.