சென்னை, அக்.31- தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்தி ரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத் தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.
வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 43 விழுக்காடு குறைவாக பெய்துள்ளது. அக்டோபர் மாதத்தில் வழக்கத்தை விட குறை வான மழை பெய்துள்ளது. கன்னியா குமரி மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமாகவும், 16 மாவட்டங்களில் குறைவாகவும் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.