மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் விடுதலை போராட்ட வீரருமான தோழர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் சென்னையில் புதன்கிழமை (நவ.15) காலமானார். அவருக்கு வயது 102.
சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்த என்.சங்கரய்யாவுக்கு சளி தொந்தரவு, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் திங்களன்று (நவ.13) சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு காலமானார்
தலைவர்கள் விரைவு
தோழர் என்.சங்கரய்யா மறைவுச்செய்தி அறிந்து மருத்துவமனை விரைந்த கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செய லாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை) , ஜி.செல்வா (மத்திய சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை), மாநி லக்குழு உறுப்பினர்கள் வெ.ராஜசேகரன், எம்.ராம கிருஷ்ணன் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் நேரில் அஞ்சலி
தகவல் அறிந்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, திமுக பொருளா ளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இ.கருணாநிதி எம்எல்ஏ ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் குரோம்பேட்டை இல்லத்திற்கு சங்கரய்யா உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் துரை வைகோ, முன்னாள் மத்திய அமைச்சரும் திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்பியுமான சு. திருநாவுக்கரசர், காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் கு.செல்வபெருந்தகை, திமுக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா, கல்வியாளர் தாவூத்மியாகான், திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தோழர் என். சங்கரய்யா உடல் குரோம்பேட்டை யில் இருந்து கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் அமைந்துள்ள தி.நகர் வைத்யராம் தெருவில் உள்ள பி.ராம்மூர்த்தி நினைவகத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அரசியல் கட்சித்தலைவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் நிர்வாகிகளும் ஊழியர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆர்.நல்லகண்ணு அஞ்சலி
மாநிலக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தோழர் என்.சங்கரய்யா உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில செயலாளர் இரா. முத்தரசன், மாநில நிர்வாகிகள் நா.பெரியசாமி, மு.வீர பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.கு. தமிழரசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செய லாளர் மு.அன்பரசு, இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தலை வர்கள் எஸ்.சுனில்குமார், ரவிக்குமார், ராஜகோபால், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் எம்பி ஜெயவர்த்தன், நடிகர் மன்சூர் அலிகான், ஆம்ஆத்மி தமிழக தலைவர் வசீகரன் ஆம் ஆத்மிரவீந்திரநாத் (மருத்துவர்கள் சங்கம்) மூத்த பத்திரிகையாளர் என்.ராம், மூத்த வழக்கறிஞர் வைகை, பொன்னி (பி.ஆர். மகள்கள்), பாஜக நிர்வாகிகள் கேசவ விநாயகம், கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.