சென்னை,ஜன.31- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் 150 தாழ்தள பேருந்து கள் கொள்முதல் செய்யும் வகையில் உற்பத்தியாளர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத் துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு முதல்வரின் உத்தர வுப்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் பயணிகள் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக எளிதில் பயன்படுத்து வதற்குரிய அனைத்து வசதிகளு டன் கூடிய 150 புதிய தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் தயாரித்து வழங்க உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளை விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 26 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 16 பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 20 பேருந்துகள், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 38 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 33 பேருந்துகளும் மற்றும் திருநெல் வேலி அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 17 பேருந்துகள் என பகிர்ந்து வழங்கப்படவுள்ளன. இவ்வாறு 150 புதிய தாழ்தள நகர பேருந்துகள் பொதுமக்கள் போக்குவரத்து சேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
இந்த முயற்சி களின் வாயிலாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலம் வழங்கப்படும் பொதுப் போக் குவரத்து சேவைகள் தமிழ்நாடு முதன்மையான நிலைக்கு உயர்த் திடும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.