புதுச்சேரி யூனியன் பிரதேசமானது தமிழகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சிறு சிறு பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். 1947இல் இந்தியா விடுதலை அடைந்தாலும், புதுச்சேரி பிரதேசம் பிரெஞ்சு ஆட்சி யாளர்களிடமிருந்து விடுதலை அடைய 7 வருடமானது. 1954இல் புதுச்சேரி விடுதலை பெற்றாலும், 1963 வரை பிரெஞ்சு நாட்டு சட்டங்களே அமலில் இருந்தது. 1963-க்கு பிறகு புதுச்சேரி யூனியன் பிரதேசம் இந்திய நாட்டின் சட்டத்திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டு தற்போது வரை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுபாட்டில் உள்ளது.
பெயரளவுக்கு சட்டமன்றம் மக்களால் தேர்வு செய்யப்படும் சட்டமன்ற நிர்வாகம் புதுச்சேரியில் இருந்தபோதிலும், ஒன்றிய ஆட்சியின் கட்டுபாட்டிலேயே இன்னும் இருப்பது தான் மிகவும் மோசமான நிகழ்வாகும். சட்டமன்றம் தனியாக இருந்தும், சட்டம் நிறைவேற்ற முடியாத சட்டமன்றம் எதற்கு என்ற கேள்வி புதுச்சேரியை சேர்ந்த ஒவ்வொருவரும் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மாநில சுயாட்சி இல்லாததே. முழு உரிமை மக்களால் தேர்வு செய்யப்படும் ஆட்சிக்கு முழு உரிமை அளிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகளோடு இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது. மாநில உரிமைக்கான மாநாடுகள், சிறப்பு கருத்தரங்கம் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளது.
பெயரளவுக்கு சட்டமன்றம் மக்களால் தேர்வு செய்யப்படும் சட்டமன்ற நிர்வாகம் புதுச்சேரியில் இருந்தபோதிலும், ஒன்றிய ஆட்சியின் கட்டுபாட்டிலேயே இன்னும் இருப்பது தான் மிகவும் மோசமான நிகழ்வாகும். சட்டமன்றம் தனியாக இருந்தும், சட்டம் நிறைவேற்ற முடியாத சட்டமன்றம் எதற்கு என்ற கேள்வி புதுச்சேரியை சேர்ந்த ஒவ்வொருவரும் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மாநில சுயாட்சி இல்லாததே. முழு உரிமை மக்களால் தேர்வு செய்யப்படும் ஆட்சிக்கு முழு உரிமை அளிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகளோடு இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது. மாநில உரிமைக்கான மாநாடுகள், சிறப்பு கருத்தரங்கம் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளது.
ஜிஎஸ்டி ஒன்றிய அரசு சமீபத்தில் நடைமுறை படுத்திய ஜிஎஸ்டி வரி சட்டத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் கடுமை யாக பாதிக்கபபட்டுள்ளது. ஒன்றி யத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநர் முழு அதிகாரமும் எனக்கே என்று கூறுகிறார். ஏற்கனவே இருந்த ஆளுநரை போன்றே தற்போதைய துணைநிலை ஆளுநரும் புதுச்சேரியில் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தொடர்ந்து தடைபோடும் துணைநிலை ஆளுநரே வெளியேறு என்ற முழக்கத்தோடும், மாநில அந்தஸ்து மட்டுமே தீர்வு என்ற ஒற்றை முழக்கத்தோடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த காலங்களில் போராட்டம் நடத்தினர். எத்தகைய போராட்டங்களுக்கு பிறகும் நடத்தினாலும் எங்களது அதிகாரத்தை தொடர்வோம் என்று இறுமாப்புடன் ஒன்றிய ஆட்சியாளர்கள் புதுச்சேரியை தங்கள் கட்டுபாட்டிலேயே வைத்துள்ளனர்.
முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்த்துக்கான போராட்டங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற போது தற்போதைய முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி எதிர்கட்சி யாக இருந்தார். அப்போது, மாநில அந்தஸ்துக்காக தில்லி செல்வோம் என்றார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளார். சுதந்திரதின விழா போன்ற நேரங்களில் மட்டும் மாநில அந்தஸ்து பிரச்சனையை மேலோட்டமாக பேசுகிறார்.
வீரம் செரிந்த போராட்டம் புதுச்சேரியின் விடுதலையில் கம்யூனிஸ்ட்டுகளின் வீரம் செரிந்த போராட்டங்கள் முக்கிய பங்கு வகித்தன. அத்தகைய போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகட்சிகள் மட்டுமே இன்னும் முன் எடுப்பவர்களாக உள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே தற்போது மக்கள் நலனை காக்க மாநில உரிமைகளை மீட்க ஞாயிற்றுக்கிழமை (நவ. 13) அரசியல் சிறப்பு மாநாட்டை சிபிஎம் நடத்துகிறது. இதில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இத்தகைய மாநாட்டில் புதுச்சேரி மாநில உரிமைகளை வென்றெடுக்க ஏனைய இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை இணைத்து வலுவான இயக்கத்தை நடத்துவதற்கும் அறைகூவல் விடுக்கப்படும்.
-இரா.முருகன்