புதுச்சேரி,ஆக.26- புதுச்சேரி அரசின் 2019-2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரை யுடன் திங்களன்று(ஆக. 26) காலை 9.30 மணிக்கு துவங்கியது. சட்டப் பேரவையில் உரையாற்ற வந்த துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை பேரவைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்து பூச்செண்டு கொடுத்து வர வேற்றார். பின்னர் ஆளுநரை பேரவை மைய மண்டபத்திற்கு அழைத்து சென்றார். அத னைத் தொடர்ந்து துணை நிலை ஆளுநர் உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- ஏழை, அடித்தட்டு மக்களின் நலனுக்காக இந்த அரசு எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து நான் ஆழ்ந்த மன நிறைவு பெற்றிருக்கிறேன். நிதி ஆதா ரங்கள் அளவாகவே இருப்பதால் செல வினங்களை வருவாய்க்கு தகுந்தவாறு சீர் செய்து கொள்ள வேண்டிய நிலையில் அரசு உள்ளது. நிதி நெருக்கடியிலும் ஏழைகளின் நலன்களை பேணுவதற்கு தேவையான நிதியை அரசு தொடர்ந்து, தொய்வில்லாமல் ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் அரசின் செலவினம் ரூ.7,342 கோடியாகும். இது திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.7,881 கோடியில் 93.16 சத வீதம் ஆகும். 2008-2009 ஆம் ஆண்டில் பெறப் பட்ட பொதுச் சந்தைக் கடன் ரூ.351 கோடியை கடந்த ஆண்டு அரசு திருப்பிச் செலுத்தி உள்ளது. கடந்த நிதி ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.35,860 கோடி யாகும். இது முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம் அதிகமாகும். தனிநபர் வருமானம் 2017-18ல் ரூ. 2,03,583 ஆக இருந்தது. இது 2018-19ல் ரூ.2,20,461 ஆக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் கூடுத லாகும். தொடர்ந்து பல்வேறு துறைகளின் வளர்ச்சியையும் பட்டியலிட்டார். பிறகு, ஆளுநரின் ஆங்கில உரையை பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து தமி ழில் வாசித்தார். அதனைத் தொடர்ந்து ஆளு நர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மா னத்தை காங்கிரஸ் கட்சி உறுப்பினர் லட்சுமி நாராயணன் கொண்டுவந்தார். அதனை தொடர்ந்து பேரவை கூட்டம் செவ்வாய்கிழ மைக்கு ஒத்தி வைத்தார். இக்கூட்டத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் தீபாய்ந்தானை தவிர்த்து மற்ற உறுப்பி னர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
வெளிநடப்பு
ஆளுநர் கிரண்பேடி தனது உரையை வாசிக்க துவங்கியதும், அதிமுக உறுப்பி னர்கள் அன்பழகன், பாஸ்கர்,மணிகண்டன், அஸானா ஆகியோர் காங்கிரஸ் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.