21 நாட்கள் கடைகள் அடைப்பு: புதுவை முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரி,மார்ச் 25- வர்த்தக, வணிக நிறுவ னங்களுக்கு 21 நாட்களுக்கு விடுமுறை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி 21 நாட்கள் நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, புதுச்சேரியில் அத்தியாவசிய பணிகளை களை மேற்கொள்ளும் வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நிதி மற்றும் கருவூலகம், பொது சுகாதாரம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், நல வழி, காவல், சிறைத்துறை, மின் துறை, தீயணைப்பு மற்றும் பொதுப்பணி-குடிநீர் பிரிவு தவிர அனைத்து அரசு துறைகளுக்கும் 21 நாட்க ளுக்கு விடுமுறை அளிக்கப் படுகிறது. எனினும் விடுமுறை அளிக்கப்பட்ட துறை ஊழி யர்கள் வீட்டில் இருந்த படியே பணியாற்ற வேண் டும். மேலும், பால், மருந்து மற்றும் மருத்துவ உபகர ணங்கள், உணவுப் பொருட் கள், சமையல் எரிவாயு, பெட்ரோல், காய்கறிகள் மற்றும் சானிடைசர் போன்ற அத்தியாவசிய பொருட்க ளின் வர்த்தகம் தடைபடாது. ஏனைய வர்த்தக மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 21 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆணை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
1 முதல் 9 வரை தேர்வு ரத்து: புதுவை அரசு அறிவிப்பு
புதுச்சேரி, மார்ச் 25- ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்திருக்கிறது. புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த சாத்தியமில்லை. எனவே தேர்வுகளை ரத்து செய்துவிட்டு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சிமெண்ட் கடைக்கு சீல் வைப்பு
கடலூர், மார்ச் 25- ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடலூரில் திறந்திருந்த தனியார் சிமெண்ட் கடைக்கு கடலூர் வட்டாட்சியர் சீல் வைத்தார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கடலூரில் புதன்கிழமையன்று பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டுமே திறந்திருந்தன. அவற்றிலும் கூட்டமாக பொருட்கள் வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி சந்தையில், காய்கறி கடைகள், பழக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. குறுகலான பகுதியில் அக்கடைகள் உள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்று கூறி கடலூர் கோட்டாட்சியர் ப.ஜெகதீஸ்வரன், துணை கண்காணிப்பாளர் க.சாந்தி ஆகியோர் அக்கடைகளை மூடுமாறு உத்தரவிட்டனர். மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் கடைகள் திறக்கப்பட கூடாது என்றும் அறிவுறுத்தினர். கடலூர் வட்டாட்சியர் கோ.செல்வகுமார் கடலூரில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கை ஆய்வு செய்தார். அப்போது கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் தனியார் சிமென்ட் கடை திறந்திருந்தது. ஊரடங்கு அமலில் இருக்கும் போது அரசின் உத்தரவினை மீறி திறக்கப்பட்டிருந்த அக்கடைக்கு வட்டாட்சியர் சீல் வைத்தார். கடையின் உரிமையாளர்கள் வேல்முருகன், பாபு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஏழைகளுக்கு சத்துணவு மையங்களில் உணவு
திருவண்ணாமலை, மார்ச் 25- திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணா மலை ஊராட்சி ஒன்றியம், மெய்யூர் ஊராட்சி, நரிக்குற வர் காலனியில் வசித்து வருபவர்களுக்கு சத்துணவு மையம் மூலமாக தினமும் உணவு வழங்கும் ஏற்பாடு களை மாவட்ட ஆட்சித் தலைவர் க. சு. கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், மெய்யூர் ஊராட்சி, நரிக்குறவர் காலனியில் 69 குடும்பங் களை சார்ந்த 250 க்கும் மேற்பட்டோர் வசித்து வரு கிறார்கள். இவர்களுக்கு சத்துணவு மையம் மூலம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்போது, மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் ‘கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் வசித்து வரும் நரிக்குற வர்கள், இருளர்கள், ஆதரவற்ற நிலையில் தினக் கூலியை நம்பி வாழ்ந்து வருபவர்கள் 20,000 க்கும் மேற்பட்டோருக்கு இன்று முதல் சத்துணவு மையங்கள் மூலம் தினமும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவு காலத்தில் அத்தியா வசிப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், இறைச்சி கடைகள் அரசு உத்திரவிட்டுள்ள நடைமுறைகளை கடைபிடிக்காமல் விற்பனை செய்தால் சம்மந்தப்பட்ட கடைகள் உடனடியாக மூடப்படும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு வாகனங்களில் வருபவர் களுக்கு அனுமதி அளிக்கப்படும். இதனை தவிர்த்து தேவையில்லாமல் நான்கு சக்கரம், இரு சக்கரம் உட்பட பிற வாகனங்களில் பயணம் செய்தால், ஊர டங்கு உத்தரவு திரும்பப் பெறும் வரை அனைத்து வாகனங்களும் காவல் துறை மூலமாக பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கடலூர், மார்ச் 25- மாநில அரசு அறிவித்திருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் இருபத்தி ஒரு நாட்க ளுக்கும் போதுமானதாக இல்லை என்றும் இந்த விவரத்தை 5 ஆயிரமாக உயர்த்தி அறி விக்கவேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதுகுறித்து முதலமைச்சருக்கு அவர் எழுதியிருக்கும் கடிதம் வருமாறு: மத்திய அரசும் மாநில அரசும் இரு பத்தோரு நாட்கள் மக்கள் நடமாட்டத்தை தடை செய்து நோய் பரவாமல் இருக்க அறிவித்துள்ளதை வரவேற்கின்றோம். இருபத்தோரு நாட்கள் மக்கள் வாழ்வ தற்கு உரிய ஏற்பாடுகளை அரசு செய்திட வேண்டும் அரசு அறிவித்துள்ள குடும்பத் திற்கு 1000 ரூபாய் நிவாரணம் போதுமான தல்ல. இதை ரூபாய் 5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கிராமப்புற பகுதிகளில் வேலையின்றி தவிக்கும் விவசாய தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள், கடலோரப் பகுதி மீனவ மக்களுக்கும் நிவாரணம் அறிவிக்க வேண்டும். அனைத்து நகர, கிராமப்புற மக்கள் வாங்கி யுள்ள நுண்நிதி நிறுவன கடன்களை கட்ட வலியுறுத்தி தொடர்ந்து நிறுவன ஊழி யர்கள் வீடுகளுக்கு வரும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு மூன்று மாதத்திற்கு நுண் நிதி நிறுவன கடன்களை வசூலிக்க தடை விதிக்க வேண்டும். தடை காலத்தில் அனைத்து பகுதிகளி லும் மக்களுக்கு தேவையான அத்தியாவ சியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு அறிவித்துள்ளது போல் அனைத்து ரேஷன் கடைகளிலும் அனைத்து பொருட்க ளும் இலவசமாக கிடைக்க உரிய நடவ டிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.