சென்னை,டிச.17- எழுத்தாளர் இமையம் ‘கலைஞரின் படைப்புலகம்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று (டிச.17) வெளியிட்டார். நூற்றாண்டு காணும் ஆளுமைகள் என்னும் தலைப்பின்கீழ் புகழ்பெற்ற அரசியல் ஆளுமைகள் மற்றும் எழுத்தாளர்கள் குறித்து சிறப்பு நூல்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 2022 ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் இமையத்தின் “கலைஞரின் படைப்புலகம்” என்ற இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூலானது, கலைஞர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கடிதங்கள், பயண நூல், திரைக்கதை வசனங்கள், திரை இசை பாடல்கள், நெஞ்சுக்கு நீதி, உரைகள் ஆகியவற்றி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தொகுப்பாகும். இந்நூலில் இந்திய அளவில் புகழ்பெற்ற 19 எழுத்தா ளர்கள் எழுதிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ஒரு கட்டுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் நா.முருகானந்தம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சோ.மதுமதி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, எழுத்தாளர் இமையம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.