tamilnadu

img

பொதுப் போக்குவரத்து முடக்கம்: கட்டுமான தொழில் மீண்டும் பாதிப்பு

சென்னை, மே 7- மத்திய மாநில அரசுகளின் ஊர டங்கு உத்தரவுகளால் ஒரு  மாதத்துக்கு மேலாக நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த கட்டுமான  தொழில் மீண்டும் தொடங்கி யுள்ளது. இருப்பினும் மாவட்டம் விட்டு  மாவட்டத்துக்கு கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல பொதுப் போக்குவரத்து இல்லாத தால் காவல்துறையில் அனுமதி பெற்ற பிறகே எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல இடங்களில் காவல் துறையின் கெடுபிடி கடுமையாக உள்ள தால் கட்டுமான தொழில் மீண்டும்  முடங்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது. கொரோனா நோய் பரவ லைத் தடுக்க ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டதால் கட்டுமான தொழில் உட்பட அனைத்து தொழில்களும் நிறுத்தப்பட்டன. இதனால் கட்டுமான தொழி லாளர்கள் வருவாய் இழந்து குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3-ல் முடிவ டைந்ததையடுத்து கட்டுமான தொழிலை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

கட்டுமானத் தொழிலுக்கு தேவையான சிமெண்ட், கம்பி, செங்கல் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்  செல்லவும் அனுமதி வழங்கப் பட்டது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக முடக்கம் அடைந்திருந்த கட்டுமான தொழில் மீண்டும் தொடங்கியுள்ளது. பாதியில் விடப்பட்ட கட்டிடங்களில் மீண்டும் கட்டுமானம் நடை பெற்று வருகிறது. இதனிடையே மாவட்ட எல்லைப் பகுதியி லிருந்து பக்கத்து மாவட்டத்துக்கு கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்வதை காவல் துறையினர் தடுப்பதாக கட்டு மான தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்ட ஆட்சியரின் அனுமதி அட்டை இருந்தால் மட்டுமே கட்டுமானப் பொருட்களை மாவட்டங்களுக்கு தடுத்துச் செல்ல காவல்துறையினர் அனுமதிக்கின்றனர். இதேபோல் பொதுப்போக்குவரத்து தடுக் கப்பட்டுள்ளதால் பணியாளர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்க ளில் கட்டுமான தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கட்டு மான தொழில் மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.