tamilnadu

img

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சிபிஎம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெரியபட்டு, புதுசத்திரம், பு.முட்டலூர் எம்.ஜி.ஆர். சிலை, ஜவுளிகடை, தீர்தான்பாளையம் முடக்கு பகுதிகளைச் சேர்ந்த 110 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு சார்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயசீலன், சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகள் விஜய், துரை, செந்தில் உள்ளிட்டோர் பலர் கலந்து கொன்டனர்.

;