தமிழக அரசிடம் சிபிஎம் உள்ளாட்சி பிரதிநிதிகள் முறையீடு
சென்னை, அக். 3 - உள்ளாட்சி அமைப்புக்களுக்கு கூடுதல் நிதி, அதிகாரம் வழங்க வேண்டும்; மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புக்கள் மூலம் நடைமுறைக்குக் கொண்டுவரப் பட்டுள்ள சொத்து வரி, குப்பை வரி உயர்வு மற்றும் பல்வேறு கட்ட ணங்கள், அபராதங்கள் உயர்வை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி, அதிகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதி கள் சார்பில் 24.09.2024 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
இந்த கோரிக்கைகள் தொடர் பாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் மனு அளித்து வலி யுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வியாழ னன்று (03.10.2024) நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை யின் செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி இயக்குநர் கிரண் பிர்லா ஆகிய அரசு அதிகாரிகளை யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன், சென்னை மாநக ராட்சி வார்டு உறுப்பினர் ஆர். ஜெயராமன், பழனி நகர்மன்றத் துணைத் தலைவர் கே. கந்தசாமி, பேரூராட்சி உறுப்பினர்கள் விஸ்வ நாதன், சேகர் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
உள்ளாட்சிகளுக்கு 18 வகை அதிகாரங்களும் உறுதி செய்யப்பட வேண்டும். சொத்து வரி, தொழில் உரிமைக் கட்டணம், கட்டிட அனு மதிக் கட்டணம், அபராதம் வசூ லித்தல் போன்ற வரிகளுக்கு கட்டண உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மதுரை, கோவை, திருப்பூர் போன்ற மாநகராட்சி, நக ராட்சிகளில் குப்பை வரி உயர்த்தப் பட்டுள்ளது. குப்பைக் கழிவு களை பொது இடத்தில் கொட்டி னால் அபராதம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய சுமைகளை சாதாரண உழைக்கும் மக்கள் தாங்கும் அளவில் இல்லை. எனவே இந்தக் கட்டணங்களை கைவிட வேண்டும்.
சிக்கன நடவடிக்கை என்ற பெய ரில் கீழ் நிலைப்பணிகள், தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு கொடுப் பதை நிறுத்த வேண்டும்.
முன்னறிவிப்பின்றி வியாபாரி களை அகற்றுவதை நிறுத்த வேண்டும். மாற்று இடங்களை உறுதி செய்யாமல் வியாபாரி களை அகற்றக் கூடாது. நீண்ட காலமாக குடியிருப்புகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாக மறுகுடியமர்த்தல் கொள்கை இருக்க வேண்டும்.
பட்டியலின பிரதிநிதிகள் முழு சுதந்திரத்துடன் செயல்படும் சூழலை உருவாக்கிட வேண்டும். வார்டு சபைகள் செயல்பாட்டை மேம்படுத்திட வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் விரிவுப் படுத்தப்பட வேண்டும். வறுமைக் கோடு பட்டியலை தமிழ்நாடு அரசு உடன் கணக்கு எடுத்திட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதி களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
மன்ற உறுப்பினர்களுக்கு மன்றத் தீர்மானங்கள், தீர்மா னங்களின் பதிவேடுகள், ஆவணங் களை பார்க்க மூன்று நாட்களுக்கு முன்னரே வெளிப்படையாக வைக்க வேண்டும். அரசு விதிப் படி மன்றத்தின் முதல் ஏழு பொருட் களை (வரவு - செலவு, நடைபெறும் பணிகள்) ஒவ்வொரு கூட்டத்திலும் வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப்புறங்களில் வார்டு சபாவிற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
அரசு விழாக்கள் நடைபெறு கின்ற பொழுது துணைத் தலைவர் களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப் பட வேண்டும். சொத்துவரி, பெயர் மாற்றம் போன்ற பணிகள் இணை யதளத்தின் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் திட்டமிட்டு கட்டப்பட வேண்டும்.
மாவட்டக் கிளை நூலகங்கள் அமைத்திட நகராட்சி நிர்வாகம் இடம் கொடுத்து உதவிட வேண் டும். நிதிநிலை அறிக்கை என்பது முழுமையாக தமிழில் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் வரவு-செலவு வைக்கப்பட வேண் டும். வார்டு மறுசீரமைப்பு என்பது அனைத்து கட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கி நடைபெற வேண்டும். வார்டு சபாக்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் மீது, அமைச்சருடன் பரிசீலித்து உரிய முறையில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.