tamilnadu

img

குடிநீர் தட்டுப்பாடு கீரப்பாளையத்தில் காலி குடங்களுடன் போராட்டம்

குடிநீர் தட்டுப்பாடு கீரப்பாளையத்தில்  காலி குடங்களுடன் போராட்டம்

சிதம்பரம், ஜூன் 12 -  செங்கல்மேடு கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக போர்வெல் பழுதான நிலை யில் உள்ளதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் மிக வும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடிநீர் எடுக்க பக்கத்துக் கிரா மத்திற்கு 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கீரப்பாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பழ.வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். ஆர்.நெடுஞ் சேரலாதன், சிபிஎம் கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் ஏ.செல்லையா, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் கே.முருகன், கே.குணசேகரன், கே.ராஜ் குமார், கிளைச் செயலாளர் த.சரசு மற்றும் கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடி வில், வட்டார வளர்ச்சி அலு வலரிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், ஒரு வார காலத்திற்குள் புதிய போர்வெல் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார். அதனை ஏற்று கலைந்து சென்றனர்.