tamilnadu

img

பிஎஸ்என்எல் மொபைல் சேவையின் தரத்தை உயர்த்தக்கோரி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் மொபைல் சேவையின் தரத்தை  உயர்த்தக்கோரி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜூன் 26- புதுச்சேரியில் பிஎஸ்என்எல் மொபைல் சேவையின் தரத்தை உயர்த்திடக் கோரி உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தலைமைப் பொது மேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வூதியர் சங்கங்களின் புதுச்சேரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் வி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கி ணைப்பு குழுவின் கன்வினர் சுப்ரமணியன், ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட உதவித் தலைவர் சண்முகசுந்தரம், சிஐடியூ சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கொளஞ்சியப்பன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினார்கள். மதிய உணவு இடைவேளையில் நடைபெற்ற போராட்டத்தில் திரளான பிஎஸ்என்எல் ஊழி யர்கள், ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். பிஎஸ்என்எல் மொபைல் சேவையின் தரத்தை உயர்த்த வேண்டும், 4ஜி அலைக்கற்றில் உள்ள குறைபாட்டை நிவர்த்தி செய்து வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவை வழங்க வேண்டும், வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.