tamilnadu

img

சாதி வெறி தாக்குதலை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்

சாதி வெறி தாக்குதலை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ஜூன் 20- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தில் பட்டியலினத்தைச் சார்ந்த இளைஞர் நாராயணன் மீதான சாதி வெறி தாக்கு தலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனிவேலின் மகன் நாராயணன் உளுந்தூர்பேட்டையில் ஒரு கடையில் வேலை செய்து தினமும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் வழக்கம் கொண்டிருந்தார். உளுந்தாண்டார் கோவில் பகுதியைச் சார்ந்த சாதி ஆதிக்க குணம் கொண்ட புஷ்பராஜ் என்பவர் பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒருவர் ஊர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆத்திரத்தில் தகராறில் ஈடுபட்டார். பிரச்சினை வேண்டாம் என நினைத்து அந்த இடத்தை விட்டு விலகிச் சென்ற நாராயணனை உளுந்தாண்டார் கோயில் சுடுகாடு அருகே வழிமறித்த புஷ்பராஜ் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சாதி ஆதிக்க வெறியுடன் நாராய ணனை சாதி பெயரைச் சொல்லித் திட்டிய தோடு கொலை செய்யும் நோக்கில் கடுமை யாக தாக்கியுள்ளனர். இதில் கால் எலும்பு முறிவு உள்ளிட்ட பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலு வலகம் முன்பு திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சாதி வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வும், நாராயணனுக்கு உரிய சிறப்பு சிகிச்சை வழங்கவும், அவருக்கும் அவரின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வும் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம். ஆறுமுகம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் இ.அலமேலு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி , உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளர் வேலா.பாலகிருஷ்ணன்,வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ராஜீவ் காந்தி,மாவட்டக் குழு உறுப்பினர் பி. சேகர், டி.ராஜீவ்காந்தி, எம்.வி.ஏழுமலை,ஏ.குடியரசுத் மணி,டி. ராஜீவ்காந்தி,கே .வேல்முருகன்,டி.மணி கண்டன்,பி. பன்னீர்செல்வம்,எம்.பிரகாஷ் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.