இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலையில் தொடர்புள்ள சாதி வெறியர்கள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி ஞாயிறன்று (ஜூன் 16) தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க தாம்பரம் பகுதிச் செயலாளர் காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் உள்ளிட்டோர் பேசினர்.
*******************
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலையில் தொடர்புடைய சாதிவெறியர்கள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஜூன் 15) 173வது வட்டம் காமராஜர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதிக்குழுக்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் எஸ்.மகேஷ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் எஸ்.குமார், ஐ.ஆர்.ரவி (சிபிஎம்), மு.ப.மணிகண்டன், ரகுராம் (வாலிபர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.
*******************
நெல்லை மாவட்ட வாலிபர்சங்க நிர்வாகி அசோக் படுகொலையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடசென்னை எழும்பூர் பகுதிக்குழு சார்பாக சனிக்கிழமையன்று புரசைவாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட பொருளாளர் மஞ்சுளா, மாவட்ட துணைச் செயலாளர் முருகேசன்,பகுதி பொருளாளர் வெங்கடேஷ் பகுதி துணைச் செயலாளர்கள் பார்திபன்,முனிராஜ் கலந்து கொண்டனர்