நிலக்கரி எடுத்துச் செல்ல தனிப்பாதை கோரி ஆர்ப்பாட்டம்
கடலூர், செப்.30- புதிய சேவை பிரிவு முதல் மந்தாரக் குப்பம் வரை லாரிகளில் நிலக்கரி எடுத்துச் செல்ல தனி பாதை அமைத்திட கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெய்வேலி வட்டம் 29 சூப்பர் பஜார் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அலுவலக செயலாளர் ஜே.சாமுவேல் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட இணைச்செயலாளர் டி.ஜெயராமன், என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் டி.பழனிவேல், பிபிஎம் நகர செயலாளர் ஆர்.பாலமுருகன், சிஐ டியு நிர்வாகிகள் பி.புண்ணியமூர்த்தி, எஸ்.முருகன், டி.ரமேஷ்குமார், ஆர்.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் எஸ்.வேலாயுதம் நன்றி கூறினார்.
