சென்னை,அக்.5- சாம்சங் தொழிலாளர் களின் உரிமைகளை காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ வலியுறுத்தி யுள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை யில், “ இந்நிறுவனத்தில் சி.ஐ.டி.யு (இந்திய தொழிற்சங்க மையம்) சார்பில் சங்கம் ஒன்றைத் தொடங்குவதற்கு தொழிலா ளர்கள் முடிவு செய்தனர்.இதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் அனுமதி அளிக்க வில்லை. இதை எதிர்த்து செப்டம்பர் 9ஆம் தேதி முதல் நடந்து வரும் போராட்டத்தால், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சுமார் 60 சதவீதம் அளவுக்கு மட்டுமே உற்பத்தி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
1500 தொழிலாளர்கள் கலந்து கொண் டுள்ள இந்த வேலை நிறுத்தம் முடிவு காண வேண்டுமெனில் தமிழக அரசு மேலும் கூடுதல் தலையீடு செய்து, தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு சாம்சங் இந்தியா நிறு வனத்திற்கு அறிவுறுத்தல் வழங்கி தொழிற் சங்கம் முன் வைத்திருக்கும் கோரிக்கை கள் மீது பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்; தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கையான, சாம்சங் இந் தியா தொழிலாளர் சங்கத்தை, தமிழ்நாடு தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளார்.