tamilnadu

img

காவல் ஆணையர் 5 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு  

சென்னை - காவல் ஆணையர் 5 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல் ஆணையர் 5 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 4 காவல் ஆணையர்களுக்கு பணியிட மாற்றமும், 2 காவல் ஆணையர்களுக்கு கூடுதல் பொறுப்பும் தரப்பட்டது.  

மேலும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் சென்னை காவல்துறை கமிஷ்னராக சங்கர் ஜிவால் பணியைத் தொடருவார். டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஆபாஷ்குமார், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவில் தொடருவார்.

டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.கே.விஸ்வநாதன், வீட்டு வசதி கழகத்தின் டிஜிபியாக தொடருவார் என்றும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

;