tamilnadu

img

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் மறைவு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

தமிழறிஞர், பேராசிரியர் க.நெடுஞ்செழியன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

மெய்யியல்,தமிழ் இலக்கியம், பண்பாடு, சமயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனித்துவமான பங்களிப்பை செய்தவர் பேராசிரியர் நெடுஞ்செழியன். தமிழ் இலக்கியத்தில் உலகாயதம், இந்திய பண்பாட்டில் தமிழும் தமிழகமும், சித்தன்னவாசல், சங்கக்கால தமிழர் சமயம், ஆசீவகமும் அய்யனார் வரலாறும்  உள்ளிட்ட பல ஆய்வு  நூல்களை எழுதியுள்ளார்.

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராகவும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத் தலைவராகவும் பணியாற்றிய அவர், ஆய்வுப்புலத்தில் மகத்தான பங்களிப்பைச் செய்தவர். அவரது இழப்பு தமிழ் ஆய்வு உலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.