tamilnadu

img

தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் படுகொலை 

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குற்றச்சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்த ஆத்திரத்தில்  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மோசஸ். இவர் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஞாயிறன்று இரவு நவமணி உள்ளிட்ட ரவுடி கும்பல் அவரை தாக்கியது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நவமணியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 
காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக மோசஸ் கொலைசெய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.