tamilnadu

img

பட்டியல் வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனியார் நிறுவனங்களா?

சென்னை, மே 10 - பட்டியல் இனத்தவர்கள் தொழில் துவங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனியார் நிறுவனங்கள் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிப்பது குறித்துப் பதிலளிக்குமாறு, தமிழ் நாடு அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கவுதம சித்தா ர்த்தன் என்பவர் உயர் நீதிமன்றத் தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.  அதில், “ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள இங்கூர் தொழிற்பூங்காவில் பட்டிய லினத்தைச் சேர்ந்தவர்கள் பின்ன லாடை தொழிற்சாலைகள் அமைப்பதற்காக, ‘தாட்கோ’ எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழகம், 150 ஏக்கர் நிலத்தை, தமிழ்நாடு தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து 99 ஆண்டு குத்தகைக்கு வாங்கியது. இதற்காக, கடந்த 1995ஆம் ஆண்டு  203 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.

 ஆனால், கடந்த 2003-ஆம் ஆண்டு தாட்கோவிடம் ஒப்படைக்க ப்பட்ட நிலத்தில், 200 கொட்டகை கள் அமைக்கப்பட்டு, சாலை  உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப் பட்டன. இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த  நிலத்தில் எந்த தொழில் நிறுவன ங்களும் துவங்கப்படாததால் கட்டு மானங்கள் சேதமடைந்து விட்டன. மேலும், “இந்த நிலத்தில் 48 ஏக்கர் நிலத்தை கடந்த 2021-ஆம் ஆண்டு திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த மூன்று தனியார் நிறு வனங்களுக்கு தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழக மான ‘சிப்காட்’ ஒதுக்கீடு செய்துள் ளது. எந்த பொது அறிவிப்பும் வெளியிடாமல், மூன்று தனி யார் நிறுவனங்களுக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்தது தன்னிச்சை யானது.

எனவே இந்த நிலத்தில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள  மூன்று தனியார் நிறுவனங்களுக் கும் தடை விதிக்க வேண்டும். 200  கொட்டகைகளையும் பட்டியலின, பழங்குடியின நபர்களுக்கு ஒதுக் கீடு செய்ய உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வு, மனு வுக்கு நான்கு வாரங்களில் பதி லளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.