அம்பத்தூர், மே 7- ஆவடி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அடுத்த கோவில்பதாகையில் வசிப்பவர் பரசுராம். இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பரிமளா என்ற மனைவியும், 2 குழந்தை களும் உள்ளனர். தனியார் இவர்கள் கோடை விடுமுறையை கழிப்பதற்காக கடந்த 4ஆம் தேதி கேரளாவுக்கு சென்றுள்ள னர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரசுராமின் மனைவி பரிமளா, தனது செல்போனில் கேரளா வில் இருந்தபடியே வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, வீட்டின் முன்பகுதியில் மர்மநபர் ஒருவர் ஒளிந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அருகில் வசிக்கும் உறவினர் சாலமன் என்பவருக்கு தகவல் தெரிவித்திருக் கிறார். இதையடுத்து சாலமன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் பொருட்களும் சிதறி கிடந்துள்ளது
இதுகுறித்து உறவினர் பரிமளாவுக்கும், ஆவடி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறை யினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 60 சவரனுக்கும் மேற்பட்ட நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டி ருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.