“இவிஎம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, எதிர்க்கட்சிகளின் கன்னத்தில் கொடுக்கப்பட்ட அறை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். அப்போ தேர்தல் பத்திரத் தீர்ப்பு யார் செவிட்டில் விழுந்த அறையாம்..? மோடி ஆட்சியில் ஒரு நாளைக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 2023-ஆம் ஆண்டில் குஜராத்தில் ஒவ்வொரு நாளும் 6 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளனர். நாச ராஜ்ஜியம்!” என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் விமர்சித்துள்ளார்.