சென்னை, செப். 4 - சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் பிரசி டென்சி கிளப் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்க ளுக்கான ஊதிய பேச்சு வார்த்தை சுமூகமாக முடி வடைந்தது. இதனையடுத்து செவ்வாயன்று (செப்.3) அன்று சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யூனியன் தலைவரும், சிஐடியு மாநிலத் தலைவருமான அ.சவுந்தரராசனிடம், சங்கத்தின் பொதுச் செயலா ளர் கிறிஸ்டோபர் சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியாக ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாயை வழங்கி னார். மேலும், சிஐடியு மாநில மாநாட்டு நிதியாக 25 ஆயிரம் ரூபாயும், தென்சென்னை மாவட்ட வளர்ச்சி நிதியாக 25 ஆயிரம் ரூபாயும், நிர்மல் மேல்நிலை பள்ளி வளர்ச்சிக்காக 25 ஆயிரம் ரூபாயும், தீக்கதிர் வளர்ச்சிக்கு 3 ஆயிரம் ரூபாயும், சிஐடியு செய்தி வளர்ச்சி நிதியாக ஆயிரம் ரூபாய் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன், தி பிரசிடென்சி கிளப் எம்பிளாயீஸ் யூனியன் செயல்தலைவர் எஸ்.ராஜப்பா, துணைத்தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.