வேலூர், ஆக.11- சவுதி அரேபிய நாட்டில் கார் மெக்கானிக்காக வேலை செய்து மாரடைப்பால் உயிரி ழந்த தனது கணவரின் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர விரைவான நடவடிக்கை எடுக்க கர்ப்பிணி மனைவி வேலூர் மாவட்ட வருவாய் அலுவலரி டம் கோரிக்கை மனு அளித்தார். ஆம்பூரை அடுத்த சோமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. 6 மாத கர்ப்பிணியான இவர், வேலூர் மாவட்ட வரு வாய் அலுவலர் ஜெ.பார்த்தீ பனிடம் மனு அளித்தார். அதில், தனது கணவர் சுந்தர், சவுதி அரேபிய நாட்டிலுள்ள ரியாத் நகரில் கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். திடீ ரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கணவரின் உடலை மீட்டுத் தரவும், அரசு நிதியுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அந்த மனுவில் தெரி வித்திருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், அதன் மீது விரைவான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.