பிரபல பண பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் (PAYTM) நிறுவனம் தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதால், அதன் செயல்பாடு களை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில் உள்ள இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி யுள்ளது.
மதுபான கலால் வழக்கு தொடர்பாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பா ளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-ஆவது முறையாக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியா ஒற்றுமை நீதி யாத்திரை பீகார், மேற்கு வங்க எல்லை அருகே வந்த பொழுது காங்கி ரஸ் எம்பி ராகுல் காந்தியின் கார் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில், ராகுலின் கார் தாக்கப்படவில்லை என்றும், பெண் ஒருவர் குறுக்கே வந்ததன் காரணமாக பிரேக் அடிக்கப் பட்டதால் காரின் பின்புறம் சேதமடைந்தது என காங்கிரஸ் கட்சி தகவல் அளித்துள்ளது.
பாஜக ஆட்சி அமைத்தவுடன் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் தாக்குதல் அதி கரித்து வரும் நிலையில், பீஜப்பூர் அருகே நக்சல்கள் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவில் 10 மாவட்டங்களுக்கு உட்பட 40 இடங்களில் அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.