tamilnadu

img

ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை உயர்வு - அரசாணை வெளியீடு

ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500இல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500இல் இருந்து ரூ.1,000 ஆகவும், பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000இல் இருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.