tamilnadu

img

பொங்கல் பண்டிகை: ரூ.600 கோடிக்கு மது விற்பனை

சென்னை,ஜன.19- பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.606 கோடியே 72 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதத்துக்கு அதிகமாக விற்பனை நடந்துள்ளது. தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை காலங்க ளில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட மது விற்பனை  அதிகமாக இருக்கும். அந்த வகையில் புத்தாண்டு பண்டி கையையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.315 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருந்தது.  இந்தநிலையில் பொங்கல் பண்டிகை கடந்த 14ஆம் தேதி  முதல் களைக் கட்ட தொடங்கியது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையும் கல்லா கட்டி இருக்கிறது. கடந்த 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை (16ஆம் தேதி  மட்டும் விடுமுறை) டாஸ்மாக் கடைகளில் ரூ.606 கோடிக்கு  மது விற்பனை ஆகி இருப்பதாகத் தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. கடந்த 14ஆம் தேதி (போகி பண்டிகை) ரூ.178 கோடியே  44 லட்சம், 15-ந்தேதி (பொங்கல்) ரூ.253 கோடியே 39 லட்சம்,  17ஆம் தேதி (காணும் பொங்கல்) ரூ.174 கோடியே 89 லட்சம்  என மொத்தம் ரூ.606 கோடியே 72 லட்சத்துக்கு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஆகி இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதத்துக்கு அதிகமாக விற்பனை ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுடன் முடிந்தது. இந்த 2 நாட்களில் (சனி, ஞாயிற்றுக் கிழமை) சுமார் ரூ.380 கோடி வரை மது விற்பனை ஆகும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் பார்க்கும்போது, பொங்கல் பண்டிகை விடுமுறையில் டாஸ்மாக் கடைகளில் மொத்தம் ரூ.986 கோடிக்கு மேல் மது விற்பனை ஆக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

;