சென்னை, ஏப். 16- வடசென்னையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கிளை அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கலாநிதி வீரா சாமி தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் வட சென்னை யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆர்.கே. நகர் 40ஆவது வட்டத்தில் வீதி வீதியாகச் சென்று செவ்வாயன்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், சிஏஏ, ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் ஆகிய சட்டங்கள் மக்களை பிளவுபடுத்து வதுடன் நாட்டை சர்வாதிகார பாதைக்கு எடுத்துச் செல்லும். மாநில உரிமையை முற்றி லுமாக பறிக்க பாஜக முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா, மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட போது எட்டிக் கூட பார்க்காத பிரதமர் மோடி தேர்தல் வந்தவுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக் கிறார். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறுத்தது பாஜக. அதேபோல் பாஜக கூறிய எந்த வாக்குறுதிகளையும் இதுவரை நிறை வேற்றவில்லை.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற இந்தியா கூட்டணி வேட்பாள ராகிய எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சேகர், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், பகுதிச் செயலாளர் லட்சுமணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, சிபிஐ மாவட்டச் செயலாளர் தா.கு.வெங்கடேஷ் வேம்புலி, விசிக மாவட்டச் செயலாளர் சவுந்தர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.