tamilnadu

img

ஆன்மீகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகளைத் தகர்ப்போம்!

சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீது நடை பெற்ற விவாதங்களுக்குப் பதில ளித்து அமைச்சர் சேகர் பாபு உரை யாற்றினார். அப்போது அவர் பேசி யதாவது: 

“2021 மே முதல் 2024 மார்ச் வரை 542 கோயில்களுக்குச் சொந்த மான 4 ஆயிரத்து 840.92 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.5 ஆயிரத்து 813 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

நந்தனாருக்குக் காட்சி தர, சிவன்  நந்தியை விலக்கியது ஒரு காலம். இப்போது நந்தனார்களை கருவ றைக்குள் செல்ல வைத்தது நம் முதல்வரின் காலம். 

குறிப்பாக ஆதிதிராவிடர் பழங்குடியினர் வாழ்விடங்களில் அமைந்துள்ள கோவில் பணி களுக்கு ஒரு லட்சம் என்று இருந் ததை 2 லட்சமாக முதலமைச்சர் உயர்த்தி கொடுத்தார். இந்த மூன் றாண்டுகளில் மட்டும் அந்தக் கோவில் பணிகளுக்காக 7 ஆயிரத்து  500 கோடி ரூபாயை முதலமைச்சர் அள்ளி வழங்கினார்.

தமிழ்நாட்டில் கோபுர கலசங்க ளின் மீது புனித நீர் விழ விழ மதவாத  அரசியல் வேரோடும் வேரடி மண் ணோடும் சாய்க்கப்படுகிறது.

நாங்கள் கலவரத்தை வளர்க்கவில்லை!

இந்திய ஒன்றியத்திலேயே தமிழ் நாட்டில்தான் திருக்கோயில்கள் அதி கம். காரணம், நாம் கோயில்களை வைத்து கலை வளர்த்தோம், கல வரத்தை வளர்க்கவில்லை. பண் பாட்டை வளர்த்தோம், பாகுபாட்டை வளர்க்கவில்லை. எந்த மதமாக இருந்தாலும் அன்பு கொள்ளவே சொல்கிறது.

(பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார்) 

இந்து மதக் கடவுளை கோயி லில் வைத்து வணங்கலாம், பிரச்சா ரத்திற்கு அழைத்து வராதீர்கள். இறை வனிடம் வரம் கேளுங்கள், இறை வனை வைத்து வாக்கு கேட்காதீர்கள். உலகிற்கே பொதுமறையும், பொது நீதியும் வழங்கிய அன்னைத் தமிழ்  நாட்டில் ஆன்மீகத்தை அரசியலாக் கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும்.

எந்த அதிகாரமும் இங்கு செல்லாது!

மனித நேயம் ஒருபோதும் இம்  மண்ணை விட்டு அகலாது. அற நிலையத்துறையே இருக்காது என்ற வர்களின் எந்த அதிகாரமும் இங்கு  செல்லாது. நதிகள் முன்னே தான் செல்லும், பின் வந்ததில்லை. அது போல் எங்கள் முதல்வர் லட்சியத்தில் முன் வைத்த காலை பின் வைத்த தில்லை; வைப்பதில்லை.

1,810 கோவில்களில் குடமுழுக்கு!

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 7 ஆயிரத்து 648 கோவில்  களில் 5 ஆயிரத்து 097 ரூபாய் செல வில் திருப்பணிகள் நடைபெற்றுள் ளன. மேலும் 1,810 கோவில்களில் குடமுழுக்கு நடத்தி உள்ளோம். அத்துடன் 35 கோவில்களுக்கு ராஜ கோபுரங்கள் கட்டிக் கொடுத்துள் ளோம். ஆயிரம் ஆண்டுகள் பழமை யான கோவில்களில் 274 கோவில் கள் புதுப்பிக்கப்பட்டன. இவற்றில் 23 கோவில்களில் குடமுழுக்கும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 

தங்க - வெள்ளித் தேர்கள்!

தமிழ்நாடு முழுவதும் நகரப் பகுதி களில் 15 கோவில்களில் ரூ. 1405 கோடிக்கு பணிகள் நடைபெற்று வரு கின்றன. இந்தத் திட்டம் முழுமை அடைந்து பயன்பாட்டிற்கு வரும் போது இந்த ஆட்சியின் மாட்சி புரியும்.

உறுப்பினர்களின் கோரிக்கை களை நிறைவேற்றும் வகையில், மரத் தேர் 74, தங்கத் தேர் 3, வெள் ளித் தேர் 5 தயாராகி வருகிறது. இந்த  ஆண்டு மட்டும் 1,014 கோவில்களில் ரூபாய் 970 கோடி செலவில் பணி கள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்தார்.

கள்ளழகர் - மருதமலை கோவிலில்  நாள் முழுவதும் அன்னதானம்!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பேசி னார். அவற்றில் முக்கிய அறிவிப்பு கள் வருமாறு:

ஒருகால பூஜை திட்டத்தின் கீழ்  பயன்பெறும் 17 ஆயிரம் கோவில் களின் வைப்புத் தொகை ரூ. 2 லட்  சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி  வழங்கப்படும். இவ்வாண்டு 1,000 நிதி வசதியற்ற கோவில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கான மொத்தச் செலவினம் ரூ. 110 கோடி அரசு நிதியாக வழங்  கப்படும். ஏற்கெனவே, 17 ஆயிரம் கோவில் அர்ச்சகர்களுக்கு வழங் கப்பட்டு வரும் மாத உதவித் தொகை ரூ. 1,000 இவ்வாண்டு கூடுதலாக சேர்க்கப்படும் 1,000 கோவில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்படும்.

ஒருகால பூஜைத் திட்ட கோவில்  களில் பணியாற்றும் அர்ச்சகர் களின் பிள்ளைகள் நலன் கருதி, இவ்வாண்டு 500 மாணவர்களுக்கு மேற்படிப்பிற்காக தலா ரூ. 10 ஆயி ரம் கல்வி உதவித்தொகை வழங்கப்  படும்.

பக்தர்களுக்கு நாள் முழுவதும்  அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 11 கோவில்களில் நடை பெற்று வருகிறது. இவ்வாண்டு இத்  திட்டம் மதுரை மாவட்டம்- கள்ள ழகர் கோவில் மற்றும் கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணி யசுவாமி கோவில் ஆகிய 2  கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

பக்தர்களுக்கு ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 760 கோவில்களில் நடை பெற்று வருகிறது. இவ்வாண்டு மேலும் 6 கோவில்களுக்கு இத்திட்  டம் விரிவுபடுத்தப்படும்.

பழனியிலுள்ள பழனியாண்ட வர் கோவில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயி லும் அனைத்து மாணவ - மாணவி களுக்கும் ஏற்கெனவே காலைச் சிற்  றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டு மதிய உணவும் வழங்  கப்படும்.

கோவில்களுக்கு வரும் பக்தர்  கள் அனைவருக்கும் நாள் முழு வதும் பிரசாதம் தற்போது 20 கோவில்  களில் வழங்கப்பட்டு வருகிறது. இத்  திட்டம் இவ்வாண்டு மேலும் 5  கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
ஆன்மீக பயணமாக இந்த ஆண்டும் இராமேஸ்வரத்திற்கு 420  பக்தர்கள் அழைத்துச் செல்லப்படு வர். 60 வயது முதல் 70 வயதிற்கு  உட்பட்ட 1,000 பக்தர்கள் பழனி முரு கன் கோவிலுக்கும் மேலும் 1,000  பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு  ஆன்மீகப் பயணம் அரசு செலவில்  அழைத்துச் செல்லப்படுவர். 

அதேபோல், ஆடி மாதத்தில்  புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்  கும், புரட்டாசி மாதத்தில் புகழ்  பெற்ற வைணவத் திருத்தலங்க ளுக்கும் வயது மூப்பின் காரண மாகவும், பொருளாதார வசதி யின்மை காரணமாகவும், இறை தரிசனம் கிடைக்க இயலாத 60  வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட  தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். 

பொருளாதாரத்தில் பின்தங்கி யவர்களுக்கு கோவில்கள் சார் பாக 4 கிராம் தங்கத் தாலி உள்பட  ரூ. 60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை கள் வழங்கி 700 ஜோடிகளுக்கு கோவில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்படும்.

மணமக்களில் ஒருவர் மாற்றுத்  திறனாளியாக இருப்பின் கட்ட ணம் இல்லாமல் கோவில் மண்ட பங்களில் வாடகையின்றி நடத்தி  வைக்கப்படும் திருமண திட்டத்தை  விரிவுபடுத்தி மணமக்களுக்கு 4  கிராம் தங்கத் தாலி உள்பட ரூ. 60  ஆயிரம் மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கப்படும்.

நிதிவசதியற்ற கோவில்களில் ஏற்கனவே மிகக் குறைந்த மாத  ஊதியம் பெற்று வரும் இசைக் கலைஞர்களுக்கு ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

50 கோவில்களில் 100 இசைக் கலைஞர்கள் ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுவர்.