சென்னை, ஜூலை 9- மாநகராட்சி ஊழியர்களிடம் போலீசார் அத்து மீறி நடந்து கொள்வதை கண்டித்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்ட லத்தில் ஜேசிபி ஓட்டுநராக ஆர்.ஆறுமுகம் உள்ளார். இவர் புதனன்று (ஜூலை 8) நண்பகல் பணியை முடித்துவிட்டு அக்கரை வழியாக ஜேசிபி வண்டியுடன் சென்றுள்ளார். அங்குள்ள நீலாங்கரை காவல்நிலையத்திற்கு உட்பட்ட காவல் உதவி மையத்தில் இருந்த ஒரு காவலர், காய்ந்த மரத்தை ஜேசிபி மூலம் அகற்றுமாறு கூறி யுள்ளார். ஆனால், அருகில் சென்றவுடன் பச்சை மரத்தை பிடுங்கி எறியும்படி கூறியுள்ளார். அதற்கு ஜேசிபி ஓட்டுநர் ஆறுமுகம் மறுத்துள்ளார். இத னால் அந்த போலீஸ்காரர், ஆறுமுகத்தை கெட்ட வார்த்தைகளால் திட்டி அடிக்க வந்துள்ளார். மக்கள் ஒன்றுகூடி ஓட்டுநரை காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றவர்களையும் போலீசார் அவதூறாக பேசி, புகாரை பெற மறுத்துள்ளனர். நீண்ட நெடிய வாக்குவாதத்திற்கு பிறகு புகாரை பெற்றுக்கொண்டு, சிஎஸ்ஆர் தர மறுத்து விட்டனர். இதனால் அதிருப்தியுற்ற மாநகராட்சி ஊழி யர்கள் வியாழனன்று (ஜூலை 9) சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறை துணை ஆணையர், உதவி ஆணை யர்கள் உள்ளிட்டோர் சென்னை மாநகராட்சி செங் கொடி சங்கத்தின் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், பொதுச் செயலாளர் பி.சீனிவாசுலு, துணைப் பொதுச் செயலாளர் தேவராஜன் ஆயோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சம்பந்தப்பட்ட காவலரை பணியிட மாற்றம் செய்வதாகவும், ஊழியர் அளித்த புகாரின் மீது சிஎஸ்ஆர் வழங்கவும் காவல்துறை அதிகாரி கள் ஒப்புக் கொண்டனர். மாநகராட்சி ஊழியர் வாக னங்கள் பறிமுதல் செய்யப்படாது, கண்ணியமாக நடத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் உறுதி யளித்தனர்.