சென்னை, அக்.30- சென்னை பெசன்ட் நகர் கடற்கரை யில் மஞ்சப்பை விழிப்புணர்வு மின் வாகனங்கள் பிரச்சாரம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு மீண்டும் மஞ்சப்பை ஏ.டி.எம் இயந்திரத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன்,“ தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும் மீண்டும் மஞ்சப்பை என்ற மகத்தான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் 25 விழுக்காடு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது”என்றார்.
பெசன்ட் நகர் கடற்கரையை பிளாஸ்டிக் இல்லா கடற்கரையாக மாற்ற வேண்டும் என்பதற்காக, மீண்டும் மஞ்சப்பை கிடைக் கும் வகையில் ஒரு வெண்டிங் மெஷின், பிளாஸ்டிக்கை கிரஸ் செய்கின்ற மெஷின் நிறுவி உள்ளோம். இதை மக்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தீபாவளியில் பசுமை பட்டாசுகள் பயன்படுத்துகின்ற போது இயற்கையை யும் பாதுகாக்கலாம் மற்றும் ஒலி மாசு ஏற்படாமல் தடுக்கவும் முடியும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பசுமை பட்டாசு குறித்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் அவர் கூறினார்.