tamilnadu

img

பட்டா வழங்க வலியுறுத்திஆட்சியரிடம் மனு

அரசாணை 318ன்படி புறம்போக்கு நிலத்தில் நீண்டகாலம் குடியிருப்போருக்கு (மேயக்கால் வகை உட்பட) பட்டா வழங்க வலியுறுத்தி திங்களன்று (செப்.9) சென்னை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பெத்தேல் நகர் மக்கள் மனு அளித்தனர். பெத்தெல் நகர் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெற்ற இந்த மனு கொடுக்கும் இயக்கத்தில் பேரவைத் தலைவர் சூ.க. விடுதலை செழியன், செயலாளர் ப. நாராயணன், பொருளாளர் தணிகாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.