சோழிங்கநல்லூர் தொகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரி, சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று (நவ.26) மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. கட்சிப் பகுதிச் செயலாளர் ஜி.வீரா தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் பகுதிக்குழு உறுப்பினர்கள் குணசேகரன். ப.ஜெயவேல் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் டி.ராமன், சீனிவாசன், சேகர், ஜகாங்கீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.