திருவள்ளூர், அக். 11- குடிமனை பட்டா, முதியோர் உதவித் தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் சார்பில் வெள்ளியன்று (அக்.11) மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.ரவி, விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி கள் பி.அருள், குமார், சிஐடியூ நிர்வாகிகள் சி.பாலாஜி, என்.கங்காதரன், டி.கன்னி யப்பன் உட்பட பலர் பேசினர்.இந்த போராட்டத்தின் போது 600க்கும் மேற்பட்ட மனுக்கள் வட்டாட்சியரிடம் வழங்கினர். பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் தவமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செய லாளர் அ.து.கோதண்டன், மாவட்டப் பொரு ளாளர் எம்.கர்ணா, துணை நிர்வாகிகள் சேகர், ரவி ஆகியோர் பேசினர்.குடிமனை பட்டா வேண்டி வட்டாச்சியரிடம் 700கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர்
வெங்கல் கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு குடிமனை பட்டா கேட்டு மனுகொடுக்கும் போராட்டத்திற்கு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார். இதில் கரண்டு சுப்பிர மணி, சிபிஎம் திருவள்ளூர் நகரச் செயலாளர் பா.உதயநிலா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.