ராயபுரத்தில் பட்டா இல்லாமல் 10 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு அரசாணை 318/19 ன் அடிப்படையில் பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராயபுரம் பகுதிக்குழு சார்பில் வியாழனன்று (நவ. 21) தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. வடசென்னை மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர் கே.செல்வானந்தம், பாப்பு, டி.வெங்கட், பிரேமா, அண்ணாமலை, முனியாண்டி, எஸ்.பவானி உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் ராயபுரத்தில் உள்ள 52 ஆவது வட்டம் , ஆஞ்சநேயர் நகர், 1, 2, 3, 6 ஏ, 7ஆவது தெருக்கள் மற்றும் 53 ஆவது வட்டத்தில் போஜராஜன் நகர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிமனை பட்டாகோரும் மனுவை அளித்தனர்.