tamilnadu

பொய்யை பரப்பும் வக்கிர கும்பல்: திருமாவளவன் கண்டனம்....

சென்னை:
மனுதர்மத்தை தாம் விமர்சித்துப் பேசியதை திரித்து, பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என தாம் பேசியதாக பொய்யாக வக்கிர கும்பல் வதந்தி பரப்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனுதர்மமானது இந்து பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்றே குறிப்பிட்டிருக்கிறது என்பதுதான் பெரியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் கூறியது.

இந்த நிலையில் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் எனும் சனாதன நூலை எரிக்கும் போராட்டத்தை இன்று விடுதலை சிறுத்தைகள் நடத்துகிறது. இந்த போராட் டத்தில் திராவிடர் கழகம் கலந்து கொள்ளும் என்று கி.வீரமணி அறிவித்திருக்கிறார்.இந்நிலையில், பெரியார் யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை பதிவிட்டு, பெண் கள் அனைவரையும் விபச்சாரிகள் என்று திருமாவளவன் பேசிவிட்டார். ஆகையால் அவரை கைது செய்ய வேண்டும் என்கின்றனர் பாஜகவினர். பாஜகவின் செய்தித் தொடர் பாளர் நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில் திமுகவை கோர்த்துவிட்டு பதிவு செய்திருக்கிறார்.இது தொடர்பாக திருமாவளவன் அளித் துள்ள விளக்கம்:பெண்கள் காலம்காலமாக வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக பின் பற்றப்படுகிற மனுதர்மம் எனும் கருத்தியல்தான் காரணம் என்பதை நமது முன் னோர்கள் பலரும் கண்டறிந்து வெளிப்படுத்தி இருக்கின்றனர்.குறிப்பாக அம்பேத்கர், பெண்களை இழிவு செய்யும் மனுதர்மத்தை கொளுத்துவோம் என்றார். தந்தை பெரியாரும் பெண் களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை எரிப் போம் என்றார்.இந்த அடிப்படையில் தான் ஒரு மாதத் துக்கு முன்னர் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் மனுதர்மம் என்பது பெண் களை கொச்சைப்படுத்துகிறது என குறிப் பிட்டேன்.

ஆனால் அரசியல் ஆதாயம் கருதுகிற சாதிவெறி பிடித்த கூட்டம், மதவெறி பிடித்த கூட்டம் திட்டமிட்டு எனக்கு எதிரான பொய் பரப்புரையை மேற்கொள்கின்றனர். பெண்களுக்கு எதிராக நான் பேசியதைப் போன்று தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதுமுற்றிலும் பொய். பெண்களுக்காக நாங்கள் வாதாடுகிறோம். பெண்கள் மீட்சி பெற குரல் கொடுக்கிறோம்.திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தகைய துருப்புச் சீட்டுகளை கையில் எடுக்கின்றனர். இதற்கு ஒருபோதும் நாம் அஞ்ச தேவை இல்லை. இதற்கு எதிராக மக்களை நாம் அணிதிரட்டுவோம்.இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.