சென்னை, நவ.9- தமிழ்நாட்டின் கோவில்களில் முன் உள்ள பெரியார் சிலைகள் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அகற்றப்படும் என அண்ணாமலை பேசியதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தின் போது ஸ்ரீரங்கம் கோயில் முன் இருக்கும் பெரியார் சிலை உட்பட கோவில்களுக்கு முன் உள்ள அனைத்து பெரியார் சிலை களும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நீக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது குறித்து ஜெயக்குமார் கூறுகையில்,“பெரியார் சிலை அகற்றம் செய்யப்படும் என பேசுவது அண்ணாமலைக்கு பின்னடைவு ஏற்படும். தமிழகம் இதை கண்டிப் பாக அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளாது” என்றார். ஒரு தலைவர் புகழ் போற்றப்பட வேண்டும், அதுதான் மாண்பு, மரியாதையும் கூட. தலை வர்கள் புகழை சிதைக்கும் வகையில் எந்த ஒரு கருத்து தெரிவித்தாலும் அது முகம் சுழிக்கும் கருத்தாகவே கருதப்படும் என்றும் அவர் கூறினார்.