tamilnadu

img

பெரம்பூர் மற்றும் மத்திய சென்னை திமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் பெரம்பூர் 45வது வட்டம் கரிமேடு, எம்.எம் கார்டன், பி.எஸ்.என்.எல் குடியிருப்பு, சுந்தரம் பவர்லைன், மேல்பட்டி பொன்னப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், பகுதிச் செயலாளர் விஜயகுமார், ரவிக்குமார், முரளிதரன், கிருஷ்ணன், நாராயணன், விசிக பகுதிச் செயலாளர் கல்தூண் ரவி, ந.பாஸ்கர் (மதிமுக), என்.ஆரீஷ்பாபு(முஸ்லீம்லீக்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய சென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன் துறைமுகம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, தொகுதி செயலாளர் ராஜசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், தொகுதி செயலாளர் ஜலால், எம்.வி.கிருஷ்ணன், அருள்குமார், ஷாஜகான், மஞ்சுளா, காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் செல்லையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, பா.கருணாநிதி, மதிமுக தொகுதி செயலாளர் நாசர், விசிக மாவட்ட செயலாளர் செல்லதுரை, மனித நேய மக்கள் கட்சி தொகுதி செயலாளர் சாகுல் அமீது உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முனைவர் கே.ஜெயக்குமாரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீஞ்சூர் பகுதியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துளசிநாராயணன், கே.விஜயன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.விநாயகமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் என்.ரமேஷ்குமார், பகுதிக்குழு உறுப்பினர்கள் பி.கதிர்வேல், இ.ஜெயவேல், எஸ். செல்வராஜ், நித்தியானந்தம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மெரட்டூர், திருவெள்ளை வாயல், கொரஞ்சூர் ரெட்டிபாளையம், பழவேற்காடு ஆகிய இடங்களிலும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

;