சென்னை, ஏப்.16- கொளத்தூரில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வா யன்று (ஏப். 16) பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
வடசென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீரா சாமியை ஆதரித்து கொளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும், மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தயாநிதிமாறனை ஆதரித்து வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தவெளி வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்தார்.
ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங் கம் பிரதான சாலைக்குட்பட்ட 32 சாலைகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்றும், நடந்து சென்றும் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது துண்டுபிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி ஆதரவு திரட்டினார். முன்னதாக கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வந்த முதல்வருக்கு பொதுமக்களும், கூட்டணிக் கட்சியினரும், திமுக தொண்டர்களும், உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வருக்கு மேள தாளங்கள் முழங்க, பரதநாட்டியம் மற்றும் இசை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்லாமியர் கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என அனைத்து மதத்தினரும் திரண்டு வந்து ஸ்டாலினை வரவேற்றனர். அப்போது சிலர் முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வர்
பிரச்சாரத்தில் முதல்வர் ஈடு பட்டபோது பெண் ஒருவர் தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அந்த பெண் குழந் தைக்கு மரகதம் என முதல மைச்சர் பெயர் சூட்டினார். மேலும் ஜி.கே.எம் காலனியில் உள்ள விளையாட்டுத் திடலுக் குச் சென்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த கால்பந்து விளை யாட்டு வீரர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கால்பந்து விளையாடி அசத்தினார். மேலும் அவர்கள் வைத்திருந்த பந்தில் கையெழுத்திட்டார்.
ஐசிஎஃப் பகுதி
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஐசிஎப் பகுதி யில் மத்திய சென்னை மக்க ளவைத் தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் திறந்த வெளி வாகனத்திலும், நடந்து சென்றும் முதலமைச்சர் பிரச் சாரம் செய்தார். அப்போது கூடியிருந்தவர்கள் உதய சூரியனுக்கு தான் எங்கள் வாக்கு என உற்சாகமாக முழக்க மிட்டனர்.
இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, மக்களவை உறுப்பினர் கிரிராஜன், சட்டமன்ற உறுப்பி னர் ஆர்.டி.சேகர், முன்னாள் எம்எல்ஏ பா.ரங்கநாதன், திமுக பகுதிச் செயலாளர் ஏ.நாகராஜன், வ.முரளிதரன், காங்கிரஸ் மாவட்டச் செயலா ளர் ஜெ.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், பகுதிச் செயலா ளர் பா.ஹேமாவதி, மதிமுக மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் சிபிஐ மாவட்டச் செயலாளர் தா.கு.வெங்கடேஷ் வேம்புலி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியி னர், பொதுமக்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
வில்லிவாக்கத்தில் நடை பெற்ற பிரச்சாரத்தின் போது அ.வெற்றியழகன் எம்எல்ஏ, திமுக பகுதிச் செயலாளர்கள் வாசு, கூ.பீ.ஜெயின், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் மதியழகன், அ.பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டு கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
பெசன்ட் நகரில் இன்று பிரச்சாரம்
இதுவரை 36 மக்களவைத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரச்சாரத்தின் இறுதி நாளான புதன்கிழமை (ஏப். 17) தென் சென்னை, மத்திய சென்னை வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பெசன்ட் நகர் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.