tamilnadu

img

“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம்! 4-ஆம் ஆண்டு துவக்க விழா!

சென்னை, ஆக. 5 - கொரோனா காலகட்டத்தில், திமுக அரசால் தொடங்கப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம், 3 ஆண்டுகளை நிறைவு செய்து, 4 ஆம் ஆண்டில் அடி யெடுத்து வைக்கிறது. இதனை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில், 4-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “சென்னையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை கொண்டு  செல்வது சவாலாக உள்ளது. எனி னும், இதுவரை 53 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு சென்னையில் ‘மக்களை தேடி மருத்துவ திட்ட’ த்தின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்  டது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களு க்கு மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை கொண்டு செல்ல 104 என்கிற அவசர கால எண் ஆக.5 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அடுக்குமாடி குடி யிருப்புகளில் உள்ளவர்கள் இந்த  எண்ணிற்கு அழைத்தால் அவர்களுக்கு சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் 3 ஆயிரத்திற்கும் அதிக மான பணியாளர்கள் டெங்கு கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

இதனைத் தொடர்ந்து வெளி யிடப்பட்ட திட்ட செயல்பாடு அறிக் கையில், கடந்த 3 ஆண்டுகளில் 4.7 கோடி பேர் தொடர் சேவைகளை யும், 1.8 கோடி பேர் முதல் முறை சேவையையும் பெற்று சுமார் 5.93 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.