tamilnadu

img

அத்திவரதர் திருவிழாவுக்காக மக்கள் பணிகள் கிடப்பில்

காஞ்சிபுரம், ஜூன் 29- காஞ்சிபுரத்தில் ஜூலை 1 முதல் 40 நாட்கள் நடைபெறும் அத்தி வரதர் திரு விழாவிற்காக ஒட்டு மொத்த அரசு இயந்திரங்களும் செயல்பட்டு வரும் நிலையில் மக்கள் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரத்தில் 40 ஆண்டு களுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா வருகின்ற ஜூலை 1 முதல் 40 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை ரூ.29 கோடியில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் அறநிலையத் துறை, காஞ்சிபுரம் பெரு நகராட்சி சார்பில் கடந்த சில வாரங்களாகச் செய்து வரு கின்றனர். இதன் ஒரு பகுதியாகக் காஞ்சிபுரம்  நகரப் பகுதியில் போக்குவரத்து  மாற்றம், நான்கு சக்கர வாகனங்களுக்கு  அனுமதிச் சீட்டு, பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை, சம்பந்தம் இல்லாத சாலைகளில் ஆக்கிரமிப்பு எனக் கட்டி டங்கள் இடிப்பு, சிறு வியாபாரிகளை  அப்புறப்படுத்துவது என பல்வேறு  பணிகளை மக்களுக்கு இடையூறாக மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இத னால் பட்டு நகரமான காஞ்சிபுரத்தில் வியாபாரம் பாதிக்கப்படும் என வியா பாரிகள் கருதுகின்றனர். காஞ்சிபுரம் நகரத்திற்குட்பட்ட வாக னங்களுக்குக் கண்டிப்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் அனுமதிச்சீட்டு பெற வேண்டும் என அறி வித்துள்ளனர். இதனால், நகர் பகுதி யில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்ப வர்கள் கடந்த சில தினங்க ளாக பணி களை விட்டுவிட்டு ஆட்சியர் வளாகத் தில் நீண்ட வரிசையில் காத்திருந்து அனு மதிச் சீட்டை வாங்கி வருகின்றனர்.   காஞ்சிபுரம் நகரின் மிக அருகாமை யிலுள்ள ஐய்யம்பேட்டை மற்றும்  மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களுக்கு நகருக்குள் அனுமதி கிடையாது. இதனால் மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதி களிலிருந்து நான்கு சக்கர வாகனத்தில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும்  மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரவேண்டு மானால் வாகனத்தை நகருக்கு வெளி யில் விட்டுவிட்டு நடந்து செல்லும் நிலை  ஏற்பட்டுள்ளது.

பட்டுப் புடவை வாங்க வரும் வாடிக்  கையாளர்கள் நகருக்குள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பட்டுப்  புடவை விற்பனையாளர்கள் உள்ளிட்ட பிற வியாபாரிகளும் கலக்கத்தில்  உள்ள னர். இதேபோன்று வெளி மாநிலத்த வர்கள் காஞ்சிபுரம் நோக்கி வர ஆரம்பித்துள்ள நிலையில் நகரத்தில் உள்ள பல்வேறு தனியார் விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. மீத முள்ள விடுதிகளில் அறைகளின் வாடகை கட்டுப்பாடு இல்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. சின்ன காஞ்சிபுரம் பகுதியில் காலி நிலங்களை  உரிமையா ளர்களுக்குத் தெரியாமல் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளதோடு அதற்கான தொகையை வசூல் செய்யவும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இது நிலத்தின் உரிமையாளர்களே தெரியாது என்பது என்பதுதான் கொடுமையிலும் கொடுமையா கும். காஞ்சிபுரம் நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அடிப்படைத் தேவை களுக்காகப் பெருநகராட்சி மற்றும்  கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் வட்டாட்சியர் உள்ளிட்ட வர்களைச்  சந்திக்க நேரிட்டால் அலுவல கங்களில் யாரும் இருப்ப தில்லை. விசா ரித்தால் அரசு அதிகாரிகள் அனை வரும் அத்தி வரதர் திருவிழா பணியில்  இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மக்கள் பணிகள் வெகுவாக பாதிக் கப்பட்டுள்ளது. அத்தி வரதர் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து வரும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்டத்தில் நிலவும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அக்கறை காட்டவில்லை. அதிலும் குறிப்பாக விழா நடைபெறும் காஞ்சி நகர்ப் பகுதியில் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்காமல் யாருக்காக அத்தி வரதர்  திருவிழாவுக்கு முன்னுரிமை கொடுத்துச் செய்கிறார் என்று மாவட்ட மக்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர். 

நாள் தோறும் நடைபெற்று வரும் குடிநீருக்கான போராட் டங்களை முடி வுக்கு கொண்டுவருவதில் அக்கறை காட்டாத அரசு அதிகாரிகள், அத்தி வரதர்  திருவிழாவையே முழு வீச்சாக ஈடு பட்டு வருவதால், மக்கள் பணியில் கவ னம் செலுத்தவில்லை. ரூ. 29 கோடியில் திருவிழாவை நடத்தும் மாவட்ட நிர்வாகம், நகர் பகுதி யில் உள்ள சாலைகளைச் சீரமைப்பதி லும், மின்விளக்குகள் அமைத்து கொடுப்  பதிலும் முனைப்புக் காட்டாமல் இருப்  பதன் மர்மம்தான் என்ன? பாதாள சாக்கடை திட்டத்தின் பழுதி னால் ஆங்காங்கே சாலை பள்ளங்க ளில் கழிவுநீர் தேங்கியுள்ள நிலையில்,  திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிப்பறைகளின் கழிவு நீர் எவ்வாறு வெளியேற்றப்படும் என்பது கேள்விக் குறியாகியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் கூறுகையில், “ அத்தி வரதர் திருவிழாவைக் காரணம் காட்டி நக ருக்குள் வரும் பேருந்துகளை நகருக்கு  வெளியல் நிறுத்துவது, நகரமக்களின் கார்களுக்கு அனுமதி சீட்டு வாங்க நிர்பந்திப்பது, பள்ளிக்கு அரை நாள் விடுப்பு என்பது ஏற்புடையதாக இல்லை” என்றார். மாவட்டதில் நிலவும் குடிநீர் பிரச்ச னைக்கு தீர்வு கானமுடிய வில்லை. மக்களின் அடிப்படை வசதிகள் கிடப்பில் போட்டுள்ளது என்று குற்றம்  சாட்டிய அவர், அத்திவரதர் திருவிழா விற்கு வரும் வெளி மாநிலத்தவர்க ளுக்குத் தேவையான அடிப்படை வசதி களை செய்து தருவதுடன் குடிநீர் கழி வறை சுகாதாரம் தங்குமிடம் போன்ற வற்றை முறையாக ஏற்படுத்தி கொடுக்க  வேண்டும் என்றும் கூறினார்.